செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர்: தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவிலை சேர்ந்த மு.பெ.சாமிநாதன் (57). இவரது  நேர்முக உதவியாளராக தாராபுரத்தை சேர்ந்த செல்லமுத்து (50) உள்ளார். இவர் கடந்த 13ம் தேதி  சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் அவருடன் நேரடி தொடர்பில் இருந்ததால்,  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் கொரோனா பரிசோதனை செய்தார். இதில்  அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் நேற்று  முன்தினம் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அமைச்சரின் அலுவலகத்தில் இருந்தவர்கள், குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று இல்லை. அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி  செலுத்திக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: