மாஸ்கோ: சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பிறகு பொருளாதார நெருக்கடி காரணமாக தான் கார் ஓட்டுநராக பணியாற்றியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். 1991ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் ரஷ்யா உள்பட 15 நாடுகளாக பிரிந்தது. இந்நிலையில், புதின் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி குறித்து ஆவண படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தோண்றி பேசி இருக்கும் புதின், டிரைவராக பணியாற்றியது குறித்து பேச தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அது தான் உண்மை என குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவு பொருள் ஈட்டும் நிர்பந்தம் ஏற்பட்டதால் தனியார் நிறுவனம் ஒன்றில் கார் ஓட்டுநராக பணியாற்றியதாக புதின் கூறியிருக்கிறார்.