மும்பை, டிச. 14: பயிற்சியின்போது காயம் அடைந்ததால், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து துணை கேப்டன் ரோகித் ஷர்மா விலகியுள்ளார். தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பயிற்சி செய்தபோது துணை கேப்டன் ரோகித் ஷர்மா காயம் அடைந்தார். ஏற்கனவே கால் தசைநாரில் ஏற்பட்டிருந்த காயம் தீவிரமானதுடன், வலைப்பயிற்சியின்போது பந்து கையில் தாக்கியதாலும் காயம் ஏற்பட்டது.