திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தன்று (கடைசி திங்கட்கிழமை) 1008 சங்காபிஷேகம் நடப்பது வழக்கம். அதேப்போல், இந்தாண்டு நேற்று 1008 மஹா சங்காபிஷேகம் மிகவும் விமரிசையாக நடந்தது. இதையொட்டி, முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.