திருமலை: தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி இடத்தில் இருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாகசைதன்யாவை பிரிந்தபிறகு தனது தோழியுடன் அடிக்கடி ஆன்மீக சுற்றுலா சென்றுவருகிறார். 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்திருந்த அவர், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு குறித்து நிருபர்கள் கேட்டபோது, கடும் டென்ஷன் ஆனார். இந்நிலையில், தனது தோழிகளுடன் நேற்றிரவு நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தார்.