திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம்

திருமலை: தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி இடத்தில் இருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாகசைதன்யாவை பிரிந்தபிறகு தனது தோழியுடன் அடிக்கடி ஆன்மீக சுற்றுலா சென்றுவருகிறார். 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்திருந்த அவர், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு குறித்து நிருபர்கள் கேட்டபோது, கடும் டென்ஷன் ஆனார். இந்நிலையில், தனது தோழிகளுடன் நேற்றிரவு நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தார்.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் ‘செல்பி’ எடுக்க முயன்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து போஸ் கொடுத்த சமந்தா, அதன்பின்னர் காரில் ஏறிச்சென்றார். கணவரை பிரிந்துள்ள நிலையில், இனிவரும் காலங்களில், அவர் அதிக படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories: