விருதுநகர் அருகே 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் அருகே, புல்லலக்கோட்டை கிராமத்தில் 4 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். விருதுநகர் அருகே புல்லலக்கோட்டை கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதாக விருதுநகர் ஊரக காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்று காலை தனிப்படை போலீசார் புல்லலக்கோட்டையில் சோதனை நடத்தினர். அப்போது கண்மாய் அருகே ஒரு தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (25), வீரமல்லன் (31) ஆகியோர் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ‘மதுரையிலிருந்து  மூலப்பொருட்கள் வாங்கி வந்து வெடிகுண்டு தயாரித்ததும், 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வடமலைகுறிச்சியை சேர்ந்த சிலரை கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டு தயாரித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக மேலும், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Related Stories: