விருதுநகர்: விருதுநகர் அருகே, புல்லலக்கோட்டை கிராமத்தில் 4 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். விருதுநகர் அருகே புல்லலக்கோட்டை கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதாக விருதுநகர் ஊரக காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்று காலை தனிப்படை போலீசார் புல்லலக்கோட்டையில் சோதனை நடத்தினர். அப்போது கண்மாய் அருகே ஒரு தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (25), வீரமல்லன் (31) ஆகியோர் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரியவந்தது.