கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 23வது லீக் போட்டியில் மும்பை சிட்டி எப்சி- ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் மோதின. இதில் ஆதிக்கம் செலுத்திய மும்பை அணியில் 3வது நிமிடத்தில் ஹசிங்கோ, 17வது நிமிடத்தில் பிபின்சிங், 24வது நிமிடத்தில் இகோர் அன்குளோ கோல் அடிக்க முதல் பாதியில் 3-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் ஜாம்ஷெட்பூர் வீரர் கோமல் தட்டால் 48வது நிமிடத்தில் ஏலி சபியா 55வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.