ராஜபாளையம் : தொடர் மழையின் காரணமாக, ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மா, தென்னை அதிகளவு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தொடர் மழையின் காரணமாக நீரோடைகள் ஆற்றுப்பகுதியில் மழைநீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், விவசாய நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். மேலு, விளைந்த தேங்காயை வெட்ட முடியாமலும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.