ராஜபாளையம் பகுதிகளில் தொடர்மழை தென்னந்தோப்பில் தேங்கியது மழைநீர் -விவசாயிகள் கவலை

ராஜபாளையம் : தொடர் மழையின் காரணமாக, ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மா, தென்னை அதிகளவு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தொடர் மழையின் காரணமாக நீரோடைகள் ஆற்றுப்பகுதியில் மழைநீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், விவசாய நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். மேலு, விளைந்த தேங்காயை வெட்ட முடியாமலும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

மேலும், அளவுக்கு அதிகமாக மழைநீர் தேங்கி உள்ளதால் தென்னை விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தேங்கிய மழைநீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், தென்னை விளைச்சல் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: