சேலம்: சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த 16 வயதான பிளஸ் 2 மாணவி, முள்ளுவாடி கேட் அருகே டான்போஸ்கோ அன்பு இல்லத்தில் அளித்த புகாரில், தனது தாய் ராஜலட்சுமியிடம் இருந்து தந்தை விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். பெரம்பலூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமாருடன்(46) தாய் வாழ்ந்து வருகிறார். அவர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து துன்புறுத்துகிறார். தாயும் உடந்தையாக உள்ளார். வெளியே சொன்னால் ெகாலை செய்வதாக மிரட்டுவதாக கண்ணீர் மல்க கூறினார்.