கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் மாநகர பகுதியில் பூனை காணவில்லை, கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5ஆயிரம் வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. செல்லப்பிராணிகள் வளர்ப்பதினால் கஷ்டம் வந்தாலும் பிராணிகளுடன் நேரம் செலவிட்டால் மனது மிகவும் சந்தோசமாக இருக்கும் எனவும் கண் திருஷ்டி மட்டுமின்றி செய்வினைகள், சூனியம், பேய் பிசாசுகள் போன்ற தீய சக்திகளை கண்டறியும் ஆற்றல் பெற்றது. இந்த பிராணிகள் என முன்னோர்கள் கூறுகின்றனர்.