லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், லக்னோ மாவட்டத்தில் உள்ள பக்ஷிகதலாப் பகுதியில் இந்திய விமானப் படை தளம் உள்ளது. இங்கிருந்து கடந்த மாதம் 27ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், ஜோதாப்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு லாரியில் ராணுவ உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில் இருந்த மீரஜ் ரக போர் விமானத்தின் டயர்கள் காணாமல் போயின. அவற்றை யாராவது திருடி இருக்கலாம் என்று கருதப்பட்டது.