ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்திராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி, வருகிற 16ம் தேதி முதல் 15.1.22 வரை நடக்கும் பூஜைகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு. 4 மணிக்கு மங்கல வாத்தியங்கள். காலை 4.15க்கு திருமஞ்சன சேவை. 4.30க்கு கோபூஜை (சுப்ரபாத சேவை இல்லை) தேவாரம். 5 மணிக்கு பக்தர்களுக்கு அனுமதியின்றி முதல் கால அபிஷேகம், இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால அபிஷேகங்கள் கோயில் சார்பில் மட்டுமே நடத்தப்படும்.