லண்டன்: இங்கிலாந்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளிலும் பரவி வருவதால், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கட்டாய பி.சி.ஆர் சோதனை மற்றும் சுய தனிமையில் இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஒமிக்ரான் அச்சுறுத்தல் உள்ளதால் பொதுமக்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.