காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். செங்கல்பட்டு சிறப்பு அதிகாரி அமுதா, காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.