போபால்: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய பிரதேச பாஜக அமைச்சருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்ததால், தற்போது அவர் மன்னிப்பு கோரியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த உணவு மற்றும் சிவில் சப்ளை துறை பாஜக அமைச்சர் பிசாஹுலால் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் பெண்களின் உரிமைகள் குறித்து பேசுகையில், ‘உயர்சாதி மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் தங்கள் பெண்களை வீட்டிற்குள் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். சமூக - சமத்துவம் வேண்டும் என்றால், இந்த பெண்களை அவர்களின் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். செல்வாக்கு மிக்கவர்கள் தங்களது பெண்கள் சமூக - சமத்துவத்தைப் பெற அனுமதிப்பதில்லை’ என்றார்.