திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே மான், மிளாவை வேட்டையாடிய 2 வாலிபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.திருவில்லிபுத்தூர் அருகே சண்முகசுந்தரபுரம் பகுதியிலுள்ள தோட்டத்தில் வேட்டையாடப்பட்ட மான், மிளா இறைச்சி வைத்திருப்பதாக மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வனத்துறை ரேஞ்சர் கதிர்காமன், வனவர் பாரதி தலைமையில் வனத்துறையினர் அத்தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.