தோழியின் கணவர் மீது தாக்குதல் பாஜ பிரமுகர் மீது வழக்கு

வேளச்சேரி: வேளச்சேரி, லட்சுமி நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (35). இவரது மனைவி ஹேமலதா (27). நேற்று முன்தினம் ஹேமலதா தனது தோழி ஹரிணியுடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். அப்போது, வினோத்குமார் மனைவி ஹேமலதாவை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், செல்போனை  ஹரிணி எடுத்து பேசியுள்ளார். அப்போது, வினோத்குமார் ஹரிணியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஹரிணி தனது நண்பரும் பெருங்குடி பாஜ இளைஞரணி நிர்வாகி ராஜேஷிடம் (35) கூறி உள்ளார். அவர், தனது நண்பர்களுடன் வினோத்குமார் வீட்டுக்கு சென்று, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த அவர், வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார், ராஜேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: