கோத்தகிரி: நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே மிஷன் காம்ப்பவுண்ட் பகுதியில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தனியார் மருத்துவமனை வளாகத்தில் கரடி ஒன்று புகுந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் நேற்று முன்தினம் கரடி உலா வந்துள்ளது.