சென்னை: தமிழகத்துக்கான மத்திய தணிக்கை குழுவின் ஆலோசகர்களாக முன்னாள் அதிகாரிகள் அசோக்வரதன் ஷெட்டி, ஜாங்கிட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மத்திய, மாநில அரசுகளின் செலவுகள், திட்டங்கள் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு செய்யும். இந்தக் குழு அனைத்து துறைகளிலும் உள்ள திட்டங்களை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்கும். இந்த அறிக்கையில்தான் எந்தெந்த துறையில் வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் எந்த துறைகளில், எந்த திட்டங்களில் நடந்துள்ளது என்பதை விரிவாக தெரிவிப்பார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார துறையில் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய மத்தியில் தனியாக தணிக்கை குழுவும், மாநில அரசின் திட்டங்களை ஆய்வு தனியாக மாநிலக் குழுவும் உள்ளது.