தர்மபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பிலிகுண்டுலு பகுதி காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 70,000 கனஅடியாக உள்ளது. கர்நாடகாவிலுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது.