சென்னை : வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 உயர் அதிகாரிகள் கொண்ட ஒன்றியக் குழு நாளை தமிழகம் வருகிறது என்று அமைச்சர் .ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பு குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கமளித்தார். அப்போது பேசிய பேசிய அவர், மழை, வெள்ள பாதிப்பு ஆய்வு செய்ய 7 உயர் அதிகாரிகள் கொண்ட மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது. இந்தக் குழுவானது 21, 22, 23 ஆகிய தேதிகளில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு குழு ஆய்வு செய்கிறது. குமரி ,நெல்லை மாவட்டங்களில் மற்றொரு குழு ஆய்வு செய்கிறது.