சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான கண்மாய், குளங்கள், கண்மாய்கள் நிறைந்துள்ள நிலையில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சிவகங்கை அருகே ஏரியூரில் ஏரி கண்மாய் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு இக்கண்மாயில் நீர் நிரம்பிய நிலையில் வடிகால் வழியாக நீர் நிறைந்து வெளியேறி செல்கிறது.