இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு குற்றவியல் சட்ட திருத்த மசோதா, நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் தண்டனை சட்டம் 1860, மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் இம்ரான்கான், ‘பாலியல் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற அனுமதியுடன், ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும். அதற்கு இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது,’ என்று கூறினார்.