கோவை மாணவி தற்கொலை - மாநில குழந்தை நல ஆணையம் விசாரணை தொடக்கம்

கோவை: 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாநில குழந்தை நல ஆணையத்தின் விசாரணை தொடங்கியுள்ளது. ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, ஆணைய உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை, சரண்யா ஆகியோர் விசாரணை நடத்துகின்றனர். மாணவியின் பெற்றோர், உடன் பயின்ற மாணவ, மாணவிகள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. மாணவியின் தற்கொலை தொடர்பாகவும், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories: