மயிலாடுதுறை: தமிழகத்தில் சமீபத்தில் இணையதளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே தயாரிப்பாளர் நடிகர் சூர்யா-ஜோதிகா, இயக்குனர் உள்ளிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை எஸ்பி சுகுணா சிங்கிடம், பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி கடந்த 14ம்தேதி மனு அளித்தார். மேலும் நடிகர் சூர்யா எங்கு சென்றாலும் அவரை உதைக்கும் நபருக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கும் என்று பழனிசாமி அறிவித்தார்.