வாலாஜாபாத்: மழை வெள்ளத்தால் மூடப்பட்டு இருந்த வாலாஜாபாத்-அவலூர் தரைப்பாலம் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தொடர்மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பின. இதில் 100க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாலாஜாபாத்-அவலூர் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதனால் இந்த பாலம் வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.