பாட்னா: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் உறவினர்கள் ஆறு பேர் பீகாரில் நடந்த சாலை விபத்தில் பலியாகினர். பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டம் ஜுமாய் என்ற இடத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினர்கள் ஆறு பேர் பலியாகினர். பாட்னாவில் உள்ளள உறவினரின் இறுதி சடங்குக்கு சென்று திரும்பிய போது காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், மேற்கண்ட ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.