திருத்தணி: திருத்தணி பழைய சிவன் கோயில் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜடாமுனீஸ்வரர் மற்றும் கங்கையம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 13ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக கோயில் வளாகத்தில் 5 யாக சாலைகள், ஏழு கலசங்கள் வைத்து தினமும் 3 கால பூஜைகள் நடத்தப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு 4ம் கால யாக பூஜையும் 9 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு கலச ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு கங்கை அம்மன், ஜடாமுனீஸ்வரர் ஆகிய சிலைகள் மீது கலச நீரை ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடத்தினர்.