புதுடெல்லி: கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இப்பட்டியலில் 100 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே உலகம் முழுவதும் பயண தடைகள் விதிக்கப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் தடைகளை வாபஸ் பெற்று வருகின்றன. அந்த வகையில், இந்தியாவிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள், கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு, முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.