திருச்சி: ஒருமுறை 30 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் மாதந்தோறும் 20 ஆயிரம் ஊதியம் பெறலாம் என திருச்சி மாநகர இளைஞர்களை குறிவைத்து பல கோடி மோசடி செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருச்சி தில்லை நகர் பகுதியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் யூ -டியூப், பேஸ்புக், மின்னஞ்சல் மற்றும் ஆன்ராய்டு செயலியில் விளம்பரம் உருவாக்குவதற்கான வேலைவாய்ப்பு தருவதாக ஆசைவார்த்தை காட்டி வருவது அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களிடம் வசூல் செய்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் கோடி கணக்கில் பணமோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் மீது அரவிந்த் என்பவர் திருச்சி மாநகர காவல் துறையிடம் புகார் அளித்தார்.