புவனகிரி: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை, சிறுவர்கள் கூட நடந்து செல்லும் அளவிற்கு கணுக்கால் அளவே தண்ணீர் தேங்கி இருந்த பகுதியில் படகில் சென்று பார்வையிட்டார். இது சமூக வலைத்தளங்களில் பரவிப் பெரிதாகி, நகைப்புக்கு உள்ளானது. நெட்டிசன்கள் அவரை வறுத்து எடுத்திருந்தனர். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பூவாலை கிராமத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட பாஜக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் தொண்டர்களுடன் பூவாலை கிராமத்திற்கு காரில் சென்றார். அதற்கு முன்னதாகவே அவர் பாதிக்கப்பட்ட வயலை பார்வையிட பயணிப்பதற்காக பாஜகவினர் டிராக்டர் ஏற்பாடு செய்திருந்தனர்.