கொடநாடு வழக்கு நீலகிரி மாவட்ட அதிமுகவினரை விசாரிக்க திட்டம்

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணை அடிப்படையில், பலரையும் காவல்துறையினர் அழைத்து விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர்களையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் உள்ளூர் அதிமுக பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: