புதுடெல்லி: ‘கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது,’ என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி விமர்சனங்களில் சிக்குவார். இந்நிலையில், நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், ‘1947ல் கிடைத்தது உண்மையான சுதந்திரம் கிடையாது. அது வெறும் பிச்சைதான், 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது,’ என்றார். கங்கனாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.