சென்னை: சென்னை நகரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 170 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது என சென்னை வானிலை மையம் இயக்குநன் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். புதுச்சேரிக்கு மேற்கில் 170 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார். சென்னையில் இன்று 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழையும், சோழவரத்தில் 22 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.