அம்மையார்குப்பத்தில் உண்டியலை உடைத்து திருட்டு

பள்ளிப்பட்டு: அம்மையார்குப்பத்தில் அம்மன் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கணிக்கையை திருடி சென்றுள்ளனர். ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் பேருந்து நிலையம் அருகில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு புகுந்து மர்ம நபர்கள் கோயில் வளாகத்தில் இரண்டு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்களின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை திருடப்பட்டது. நேற்று காலை கோயிலுக்கு சென்ற பக்தர்கள் உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேகோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு முறை உண்டியல் உடைத்து  திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: