திருமலை: ஜம்முவில் பெருமாள் கோயில் கட்டும் பணி 18 மாதங்களில் நிறைவு பெறும் என்றும், அயோத்தியில் இடம் கிடைத்தால் பெருமாள் கோயில் கட்டப்படும் என்றும் திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரசாந்தி நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அறங்காவலர் குழுத்தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி பங்கேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வடக்கில் உள்ள கோயில்களை விரிவுப்படுத்த டெல்லி ஆலோசனைக் குழு செயல்படும். டெல்லி மற்றும் குருசேத்திரம் உட்பட பல இடங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோயில்கள் உள்ளது.