மயிலாடுதுறை : மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், திருச்சி-சென்னை எழும்பூர் இடையே புதிய தொடர் வண்டி ஒன்றை பகலில் இயக்க கோரிக்கையை ரயில்வே துறைக்கு எழுப்பி உள்ளார். தென்னக ரயில்வே துறையை பொறுத்தமட்டில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய பகுதிகள் அடங்கிய டெல்டா மாவட்டங்களில் பகல் நேரங்களில் சோழன் எக்ஸ்பிரஸ் மட்டுமே சென்னைக்கு இயக்கப்படுகிறது. இந்த சோழன் எக்ஸ்பிரஸில் கொரோனா காலத்திற்கு பின் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இல்லை. மேலும் சோழன் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன மற்றும் தூங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளேஅதிகம். இதனால் சாமானிய பொதுமக்கள் அதிகமான கட்டணம் கொடுத்து சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு நேற்று ஒரு கோரிக்கையை கடிதம் அனுப்பி உள்ளார்.