ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது யூரியா அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆனால் கடந்த 15நாட்களுக்கும் மேலாக கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலும் தனியார் உரக்கடைகளிலும் யூரியா, டிஏபி உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அழைக்கின்றனர். இதையடுத்து முதுகுளத்தூரில் உள்ள தனியார் உரக்கடைகளில் உரம் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் குவிந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.