விராலிமலை : விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் விவசாய கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் தொடர் மழையால் ஒரு சில இடங்களில் சாலைகள் சேதடைந்தும், வீடுகள் இடிந்தும் கால்நடைகள் இறந்தும் வருகிறது. இதேபோல் விராலிமலை அருகே உள்ள கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தமுருகன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு தொடர் மழையினால் கிணற்றின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்து முழுமையாக சேதமடைந்தது.