சுக்மா: மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் சக வீரர்கள் 4 பேரை சுட்டுக்கொன்றுள்ளது சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் லிங்கம்பள்ளி என்ற கிராமத்தில் சி.ஆர்.பி.எஃப்.-யின் 50வது படை பிரிவின் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பணியில் இருந்த வீரர் ஒருவர் அதிகாலை 3:30 மணிக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சக வீரர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 4 வீரர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.