புதுடெல்லி: மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை விருந்து நடந்தபோது அதிரடியாக நுழைந்த மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு, பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோரை கைது செய்தது. இந்த வழக்கை மும்பை மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவின் இயக்குனர் சமீர் வான்கடே விசாரித்தார். இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க இவர் ரூ.25 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பல பிரபல நடிகர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து இவர் ரூ.1000 ஆயிரம் பறித்து இருப்பதாகவும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார்.