ஸ்ரீநகர் மருத்துவமனையில் தீவிரவாதிகள் தாக்குதல்: ஒருவர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மருத்துவமனை வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார். ஜம்மு காஷ்மீரில் சமீப காலமா உள்ளூர் மக்கள், வெளிமாநில மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இதுபோன்ற தாக்குதலில் இதுவரையில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பீதியடைந்த வெளிமாநில  தொழிலாளர்கள் குடும்பத்துடன் வெளியேறி வருகின்றனர். இதனால், ஜம்மு காஷ்மீரி்ல கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனே, அப்பகுதியை ராணுவம் சுற்றிவளைத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தப்பிய தீவிரவாதிகளை ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது.

Related Stories: