மும்பை: போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்திருக்கும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன், போதை பொருள் தடுப்பு பிரிவில் ஆஜரானார். மும்பை அருகே சொகுசு கப்பலில் கடந்த மாதம் 2ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அச்சமயம் போதை விருந்தில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உள்ளிட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 22 நாட்களை சிறை வாசத்திற்கு பிறகு ஆர்யனுக்கு கடந்த 30ம் தேதி ஜாமின் கிடைத்தது.