போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் காண்ட்வா உட்பட 3 மக்களவை தொகுதி மற்றும் 29 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலியாக உள்ள மத்தியப்பிரதேசத்தின் காண்ட்வா தவிர ஹிமாசலப்பிரதேசத்தில் மண்டி, யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் அவேலி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று மத்தியப்பிரதேசம், ஹிமாசலப்பிரதேசம், மேற்குவங்கம், அசாம், மேகாலயா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 29 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.