சென்னை: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் முன்னாள் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் 146வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியளிக்கையில், ‘‘காங்கிரஸ் கட்சியின் ஆலோசகராக வர வேண்டும் என பிரசாந்த் கிஷோர் எதிர்பார்த்தார். ராகுல் காந்தி அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதால் அவர் மீது தவறான பிரசாரம் மேற்கொள்கிறார்.