ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி ராகுல் காந்தியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை

சென்னை: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் முன்னாள் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் 146வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியளிக்கையில், ‘‘காங்கிரஸ் கட்சியின் ஆலோசகராக வர வேண்டும் என பிரசாந்த் கிஷோர் எதிர்பார்த்தார். ராகுல் காந்தி அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதால் அவர் மீது தவறான பிரசாரம் மேற்கொள்கிறார்.

ராகுல்காந்தியை விமர்சனம் செய்ய யாருக்கும் தகுதியில்லை’’ என்றார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், பொருளாளர் ரூபி மனோகரன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, துணை தலைவர் ஆ.கோபண்ணா, வழக்கறிஞர் சுதா, மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், சிவ ராஜசேகரன், டில்லி பாபு, மாநில செயலாளர் அகரம் கோபி, சுமதி அன்பரசு, கலை பிரிவு மாநில செயலாளர் சூளை கே.ராஜேந்திரன், மயிலை தரணி, எம்.ஆர்.எழுமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: