திருச்சி: தீபாவளி இனிப்பு வகைகள் தயாரிப்பு ஆவின் வரலாற்றில் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.திருச்சியில் நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அளித்த பேட்டி: பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கான நிலுவையில் உள்ள பணம் பட்டுவாடா செய்யப்படுவது ஒவ்வொரு வருடமும் நடப்பது வழக்கம். தீபத்திருநாளை முன்னிட்டு, தற்போது தமிழகம் முழுவதும் வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. பால்வளத்துறையில் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.