தமிழ்நாட்டின் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்வதால் பரபரப்பு

நீலகிரி: தமிழ்நாட்டின் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையின் போது கணக்கில் வராத ரூ.1.38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அலுவலர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் 2 டாஸ்மாக் கடைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடைபெறுகிறது.

Related Stories: