ராமநாதபுரம்: தென்மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஒருவார அரசியல் சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் தொடங்கிய சசிகலா, காலையில் மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் சென்றார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய வாகனத்தில் மதுரை வந்த சசிகலாவை அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் கோரிபாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் சென்ற சசிகலா, அங்குள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.