சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நாளை புது கட்சியை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரால் வெளியிட்ட அறிவிப்பில், ‘கேப்டன் அமரீந்தர் சிங், நாளை (அக். 27) சண்டிகரில் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்வு அவரது பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.