சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயனடையும் பயனாளிகள் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்து வருகிறது. பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்ற கூடுதல் நோக்கங்களையும் கொண்ட இத்திட்டத்தின்படி, கல்வி நிலை உயர்ந்து, தாமதமாக திருமணம் நடைபெறுவதால் பெற்றோரில் ஒருவர் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வயது அதிகமாகிறது. எனவே முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுள் ஒன்றான பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருத்தல் வேண்டும் என்பதில் உள்ள வயது வரம்பினை 35-லிருந்து 40 ஆக உயர்த்துதல் அவசியமாகிறது.